Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM

கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவிலில் - விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் 50 சதவீதம் கூலி உயர்வு, விடுப்புஊதியம் ரூ.450 வழங்க வேண்டும்என வலியுறுத்தி, கடந்த மாதம்12-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், 12-ம் கட்டபேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, இருதரப்பினரும் ஆலோசித்து முடிவுஎடுக்குமாறு தொழிலாளர் துறைஆணையர் குமரன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜவுளிஉற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நடத்திய ஆலோசனையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து, விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பரவலை கருத்தில்கொண்டு 7 இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் ரத்னவேல், லெட்சுமி, மாணிக்கம், சுப்பிரமணியன், சக்திவேல், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x