பெண்களிடம் சங்கிலி பறித்த : 4 பேர் கைது :

பெண்களிடம் சங்கிலி பறித்த : 4 பேர் கைது :
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா, கந்தநேரி, சின்னச் சேரி, ஒடுக்கத்தூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட் டவர்கள் அளித்த புகாரின் அடிப் படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வேலூர் கூடுதல் எஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையிலான தனிப்படையினர் கந்தனேரி அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, அவ் வழியாகஇரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் அரியூர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் (21) என்பதும், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் செம்பேடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (35), ஊசூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (33), ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (28) உட்பட 4 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in