பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணை துன்புறுத்திய பூசாரி கைது :

பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணை துன்புறுத்திய பூசாரி கைது :
Updated on
1 min read

பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை வேலகவுண்டம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே உள்ள வேல கவுண்டம்பட்டி மஞ்சநாயக் கனூரில் கருப்பசாமி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் நாமக்கல் காதப்பள்ளியைச் சேர்ந்த அனில்குமார் (40) என்பவர் பூசாரியாக இருந்துள்ளார். இவர் அங்கு பேய் விரட்டுவதாகக் கூறி பூஜையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை பேய் விரட்டுவதாகக் கூறி அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இது தொடர்பாக பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார், வேல கவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பூசாரி அனில் குமாரை வேல வுகண்டம்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in