சிறுமி கர்ப்பம்: இளைஞர் கைது :

சிறுமி கர்ப்பம்: இளைஞர் கைது :
Updated on
1 min read

கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 7 மாதங் களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். தவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அச்சிறுமியை மீட்டு காப்ப கத்தில் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in