Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

செந்துறை தீயணைப்பு நிலையத்தில் 3 வீரர்களுக்கு கரோனா :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு நிலையத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செந்துறையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த சக பணியாளர்கள் 2 பேர் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் அரியலூர் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு பணிபுரியும் 8 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நேற்று மேற் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, தீயணைப்பு நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x