ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை - ஊரடங்கின்போது பயோமெட்ரிக் முறையை நிறுத்த வலியுறுத்தல் :

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை  -  ஊரடங்கின்போது பயோமெட்ரிக் முறையை நிறுத்த வலியுறுத்தல் :
Updated on
1 min read

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும் விதமாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யும் இயந்திரந்தில், பல இடங்களில் கைரேகைகள் சரிவர பதிவாகவில்லை. இதனால், ஆதார் அட்டையில் மீண்டும் கைரேகையை பதிவுசெய்து கொண்டு வரும்படி ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆதார் மையத்தில் கைரேகையை பதிவு செய்யச் சென்றால், அதற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு மீண்டும் ரேஷன் கடைக்கு சென்றால், கைரேகை பதிவாகவில்லை என்ற பதிலே பெரும்பாலும் வருகிறது. இதன் காரணமாக வேலை இழப்பு, பண விரயம், அலைச்சல் ஏற்படுகிறது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே நாளை (10-ம் தேதி) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், அரசு பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை, ரேஷன் கார்டு எண் அடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் அலைக்கழிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in