Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

வேலூர் சத்துவாச்சாரி : உதவி ஆய்வாளர் உயிரிழப்பு :

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (41). இவரது மனைவி கோமதி. இவர், காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலராக உள்ளார். இவர்களுக்கு துளசி (12) மற்றும் யாஷிகா (8), ஹர்ஷவர்தினி (8) என்ற இரட்டை பெண் குழந்தைகள் என 3 மகள்கள் உள்ளனர்.

உதவி ஆய்வாளர் செல்வ ராஜிக்கு கடந்த 6-ம் தேதி இரவு 10.30 மணியளவில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று பிற்பகல் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் காமக்கூர் பாளையம் கிராமத்தில் இன்று (மே-9) இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இவரது உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இவர், வேலூர் தெற்கு மற்றும் குடியாத்தம் கலால் பிரிவில் பணியாற்றி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x