

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் இ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று 2-வது அலைதமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்களின் உயிரைப்பறித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை
எனவே, ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புள்ள தொழிற்சாலைகள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க...