திருப்பூர் மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து  :

திருப்பூர் மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து :

Published on

திருப்பூர் மாநகராட்சி ஆணையர்க.சிவக்குமார் நேற்று கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி மூலமாக 4-வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவிநாசி சாலையிலுள்ள 26 லட்சம் லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்நடைபெறுவதால் இன்றும் (மே8),நாளையும் (மே 9) மாநகராட்சியின் 10, 12, 13, 14, 22, 23, 24, 25, 47 ஆகிய வார்டுகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in