ஈரோடு, நாமக்கல்லில் கரோனாவால் 996 பேர் பாதிப்பு :

ஈரோடு, நாமக்கல்லில் கரோனாவால் 996 பேர் பாதிப்பு :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 639 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 444 பேர் குணமடைந்துள்ளனர். 3615 பேர் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது ஆண், 67 வயது ஆண் என மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 357 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 351 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 2199 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 65 வயது பெண் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in