Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

ஒரே நாளில் புதிதாக 832 பேருக்கு கரோனா தொற்று :

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 466 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்றுவரை 21,166 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 18,443 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,591 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 141 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 13,343 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 12,488 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 740 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்32,198 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 307 பேர் உட்பட 29,764 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்து உட்பட மாவட்டத்தில் இதுவரை 343 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x