Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் - ஒரே நாளில் 480 பேருக்கு கரோனா தொற்று :

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,892-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 160 பேர் உயிரி ழந்துள்ளனர். கரோனா நோயாளிகள் 171 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்காக 10 ஆயிரத்து 223 பேர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து, கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக நேற்று 304 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x