கஞ்சா கடத்திய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது :

கஞ்சா கடத்திய இளைஞர்  குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

திருப்பூர் கோவில்வழி- முத்தணம் பாளையம் செல்லும் சாலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி நல்லூர்போலீஸார் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, கஞ்சா கடத்திவந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூர் கொளத்துப்பட்டியை சேர்ந்த செல்வம் (31) என்பவரை கைது செய்து, 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோவை மத்திய சிறையில் செல்வம் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பல்லடத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது.

இதையடுத்து செல்வத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் உள்ள செல்வத்திடம், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை போலீஸார் நேற்று வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in