சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த - தந்தை உட்பட மூன்று பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை : ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த  -  தந்தை உட்பட மூன்று பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை :  ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிறுமியின் தந்தை உட்பட மூவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர்விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியில், கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனி யாக இருந்த 10 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கோபி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நண்பர்களான அருணாசலம், மயில்சாமி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும், அருணாசலத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், மயில்சாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவர்களின் அபராத தொகை ரூ.3 லட்சத்தைசிறுமியின் சேமிப்பில் சோ்ப்ப துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in