பழவேற்காடு அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் எம்பி திடீர் ஆய்வு :

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் எம்பி திடீர் ஆய்வு :

Published on

மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் நேற்று திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பொன்னேரி எம்எல்ஏவாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள துரை.சந்திரசேகர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனையின் கட்டமைப்பு, சிகிச்சை அளிக்கும் முறைகள் மற்றும் சித்த மருத்துவ பிரிவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்த எம்பி ஜெயக்குமார், மருத்துவமனையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் வகையில் சில அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான மாவட்ட இணை இயக்குநர் ராணி, பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in