விழுப்புரத்தில் - ரெம்டெசிவிர் விற்க முயன்ற இருவர் கைது :

ரெம்டெசிவிர் மருந்தை பிளாக்கில் விற்க முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ரெம்டெசிவிர் மருந்தை பிளாக்கில் விற்க முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

விழுப்புரத்தில் ரெம்டெசிவர் மருந்தை பிளாக்கில் விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கல்பனாவுக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வாடகைக் கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரில் சோதனை மேற்கொண்டனர்.

காரில் இருந்த புதுச்சேரி வில்லியனூர் ஆச்சார்யாபுரம் ஓம் கணபதி நகரைச் சேர்ந்த விபவதேவர் (35), திண்டிவனம், உழவர் சந்தை மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் விபவதேவர்(35)தன்னை மருத்துவர் என்றும்,செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் மருத்துவமனை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

முத்துராமன் விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநராக பணியாற்றுவதாக தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரெம்டிசிவிர் மருந்து 5 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளை தலா ரூ.19 ஆயிரத்துக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் விழுப்புரம் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனர். விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in