அரியலூர், பெரம்பலூர், கரூர், காரைக்காலில் - பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

அரியலூர், பெரம்பலூர், கரூர், காரைக்காலில்  -  பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைக் கண்டித்து பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, நகரத் தலைவர் வைர வேல் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர்கள் கோகுல்பாபு, நந்தினிவிக்னேஸ்வரன், பொதுச் செயலாளர் மணிவண்ணன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர், செந்துறை, விக்கிரமங்கலம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை யில் முன்னாள் மாவட்டத் தலைவர் சாமி சந்திரசேகரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையிலும், குளித்தலை காந்தி சிலை முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந் தம் தலைமையிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலில் ஏழை மாரியம்மன் கோயில் அருகி லிருந்து பாஜகவினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்து, புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாவட்டத் தலைவர் ஜெ.துரைசேனாதிபதி தலைமை யில், புதுச்சேரி மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலதிபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in