Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கோடை மழையால் - சோத்துப்பாறை அணை நிரம்பியது :

சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் நீர் நிரம்பி வெளியேறுகிறது.

பெரியகுளம்

கோடை மழை பெய்ததால் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து வரும் நீர் அணையில் நிரம்பி வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று காலை முழுக் கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. தொடர் நீர் வரத்தால் அணைக்கு வரும் 35 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீரும் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம்,மேல்மங்கலம் வழியே வைகை ஆற்றுக்குச் செல்கிறது இதையடுத்து ஆற்றின் வழித்தடத்தில் உள்ள கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல் லும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பிய தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர். தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம் பகுதி குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x