Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேனி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180-க்கு மேல் உள்ளது.
இதனால், பாதிப்புக்குள்ளான 8 வார்டுகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான தெருக்கள் கட்டைகளால் மறித்து வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருமிநாசினி தெளித்து நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின் றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணி வதுடன், சமூக இடைவெளியையும் கடைப் பிடிக்க வேண்டும் என்று பெரியகுளம் நகராட்சி சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT