Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதால், அக்கட்சியினர் வாக்கு எண்ணும் மையம் முன் நேற்று முன்தினம் அதிகாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி அளித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸார் ஊரடங்கு விதிகளை மீறி ஒன்றுகூடி வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்ததாக, திமுகவினர் 400 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நேற்று முனதினம் வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT