Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர், ஆம்பூர் பெரியவரிக்கம் பகுதியில் உள்ள ஒரு தோல் பதனிடும் தொழிற் சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பணிக்கு செல்ல வெங்கடேசன் தனது மிதிவண்டியில் சின்ன கொம்பேஸ்வரம் வழியாக சென்றார்.அப்போது, வேலூர் நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வந்த தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x