Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவில் கூட்டம் - ஆம்பூரில் 6 கடைகளுக்கு ‘சீல்' வைப்பு : வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

ஆம்பூரில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட 6 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

திருப்பத்தூர் கரோனா பரவலை தடுக்க வருவாய்த் துறையினர், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி தலைமையிலான ஆம்பூர் வருவாய்த் துறையினர் ஆம்பூர் ஓ.வி.ரோடு, பஜார் பகுதி, பேருந்து நிலையம், ஓ.ஏ.ஆர் தியேட்டர், புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு ரெடிமேட் கடை, 2 தேநீர் கடை, பரிசுப்பொருட்கள் விற்பனை அங்காடி உள்ளிட்ட 6 கடைகளில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல், அதிக அளவில் கூட்டத்தை கூட்டியும், முகக்கவசம் அணியாமல் சிலர் வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 6 கடைகளுக்கும் அபராதம் விதித்து ‘சீல்' வைக்க வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி உத்தரவிட்டார். அதன்பேரில், ஆம்பூர் வருவாய்த் துறையினர் 6 கடைகளுக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்து அந்த கடைகளுக்கு ‘சீல்' வைத்தனர்.

கரோனா நடைமுறைகளை சரியாக பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் வருவாய்த் துறையினருக்கு ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x