Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் - திமுக தலைவருக்கு வாழ்த்து :

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவருக்கு, தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. நடந்த முடிந்த தமிழகசட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கண்ட சங்கத்தினர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள், நாவிதர், மருத்துவர் சமுதாய மக்கள் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாக, அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ருக்மாங்கதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x