Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

புதுச்சேரியில் மே 10 வரை மதுக்கடை மூடல் :

கரோனா ஊரடங்கு ஆணைக்கிணங்க, புதுச்சேரியில் மே 10 வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் வரும் 10-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி புதுவையில் உள்ள எப்எல்1, எப்எல்2, சுற்றுலாத்துறை உரிமம் பெற்ற கடைகள், சாராயக் கடைகள், கள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகளும் வரும் மே 10 ம்தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, விதி மீறினால் கலால்துறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x