Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புது மார்க்கெட் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை :

பொள்ளாச்சி

வால்பாறை பகுதியில் சாலைகளை விரிவுபடுத்தி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

வால்பாறை புது மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சந்தை நடைபெறுவது வழக்கம். குறுகலான இடத்தில் ஆக்கிரமிப்புகளுக்கு இடையே மார்க்கெட் அமைந்துள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 379 கடைகள் இந்த மார்க்கெட்டில் உள்ளன.இதுதவிர சாலையை ஆக்கிரமித்துகடைகள் நீட்டிப்பு செய்து, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. இதனால் மார்க்கெட் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின் றனர். குறிப்பாக அவசர காலங்க ளில் தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல முடியாத அள வுக்கு சாலை குறுகலாக உள்ளது.

பொதுமக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். இதேபோல வால்பாறை நகரில் இருந்து4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடுமலை எஸ்டேட் சாலையும் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. இச்சாலையையும் விரிவுபடுத்தி வால்பாறையில் இருந்து கருமலை வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை நடுமலை வழியாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x