Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
ஓசூர் நகரப்பகுதியை ஒட்டிச்செல்லும் தளி சாலை பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
ஓசூர்- தளி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைந்துள்ளதால், இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக் கான பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும், இப்பகுதியில் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகளும் உள்ளன.
இதனால், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எப்போதும் வாகன நெரிசலும் இச்சாலையில் இருக்கும்.
இந்நிலையில், இச்சாலை நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி ஆங்காங்கே குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இதனால், இச்சாலை வழியாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் என பலதரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுவதால் இச்சாலையை கடந்து செல்வதில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளுக்கும் மிகுந்த சவாலாக இருந்து வருகிறது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT