Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரியில் டிராவல்ஸ் உரிமையாளர்களிடம் - கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.92 லட்சம் மோசடி :

புதுச்சேரியில் கார்களை மாத வாடகைக்கு எடுத்து அதனை அடமானம் வைத்து மோசடி செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உத்தரலிங்கம். இவரது நண்பர்கள் 2 பேர் உத்தரலிங்கம் உதவியுடன் 3 கார்களை மாத வாடகைக்கு எடுத்தனர். ரூ.22 லட்சம் மதிப்பிலான 3 கார்களையும் சிலரிடம் 2 பேரும் அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த உத்தரலிங்கம் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், ரமேஷ் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் முடங்கி மாத தவணைகளை செலுத்த முடியாமல் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர்களை அணுகி உள்ளனர். அவர்களை ஏமாற்றி கார்களை மாத வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு சில மாதங்கள் மட்டும் கார் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வாடகையை செலுத்தி வந்துள்ளனர். பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். வாடகைக்கு எடுத்த கார்களை வேறு சிலரிடம் இருவரும் அடமானம் வைத்து மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகையில் புதுச்சேரி புதுசாரம் கவிக்குயில் நகரில் வசிக்கும் கருணாகரன் மற்றும் அவரது நண்பர்கள் என சிலரிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான 9 கார்களை வாடகைக்கு எடுத்துமோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது கருணாகரன் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ்குமார், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் நேற்று முன்தினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துஅவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x