Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் - புதிதாக 1,379 பேருக்கு கரோனா 12 பேர் உயிரிழப்பு :

பதுச்சேரி

புதுச்சேரியில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6,531 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி 1,100, காரைக்கால் 113, ஏனாம் 121, மாஹே 45 பேர் என மொத்தம் 1,379 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 11, ஏனாமில் ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 60,001 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 294, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 307, கோவிட் கேர் சென்டரில் 855 பேர் என புதுச்சேரியில் 1,456, காரைக்காலில் 68, ஏனாமில் 223, மாஹேவில் 26 பேர் என மருத்துவமனைகளில் 1,773 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 6,838, காரைக்காலில் 923, ஏனாமில் 414, மாஹேவில் 315 பேர் என 8,490 பேரும் என மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 263 ஆக உள்ளது.

623 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 (81.53 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 8 லட்சத்து 3 ஆயிரத்து 173 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 897 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

2-வது டோஸ் உட்பட

மேலும், சுகாதாரப் பணியாளர்கள் 32 ஆயிரத்து 247, முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 882, பொதுமக்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 352 என மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 481 பேருக்கு (இரண்டாவது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x