Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் உடனே கைது செய்யப்படுவர் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன், பேனா, வாட்டர் பாட்டில், சாப்பாடு உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உடனடியாக கைது
வன்முறையில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT