Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

நீதிமன்றத்தில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி :

தென்காசி

தென்காசி நீதிமன்றத்தில் கரோனாவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை நீதிபதி ரஸ்கின்ராஜ் தலைமை வகித்தார்.

கூடுதல் நீதிபதி காமராஜ்,முதன்மை மாவட்ட நீதிபதி சுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறையில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா பேசினார்.

நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அப்துல் மஜித், ஆயுஷ் மருத்துவர் ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கபசுர குடிநீர், மூலிகை தேனீர், ஆர்சனிக் ஆல்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x