Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசும்போது, ‘‘தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சுற்று முழுவதும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான வாக்கு எண்ணும் பணியை தொடங்க அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் இடையில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் மாற்று முகவரை ஏற்பாடு செய்துவிட்டுதான் செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிந்த பிறகே அரங்கை விட்டு வெளியேற வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.செந்தில்நாதன் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT