Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

தொழிலாளர் தினத்தையொட்டி அரியலூரில் ரத்த தான முகாம் :

அரியலூர்: அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில், மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

தற்போது பரவி வரும் கரோனா தொற்று காரணமாக ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும், ரத்த தானம் செய்வோர் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால், அவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்த தானம் செய்ய இயலாது. எனவே, ரத்ததானம் செய்ய விரும்புவோர் தடுப்பூசி போடுவதற்கு முன்பு அரியலூர் தலைமை மருத்துவமனையில் மே 1(நேற்று) அன்று ரத்த தானம் செய்யலாம் என்ற தகவலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட வாட்ஸ்அப் குழுக்களில் அண்மையில் பகிர்ந்தனர்.

இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமை அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x