Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த பிதேலியூஸ் (70) உட்பட 7 மீனவர்கள் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது படகில் இருந்து பிதேலியூஸ் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற சக மீனவர்கள் முயன்ற நிலையில் அவர் கடலில் மூழ்கினார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மெரைன் போலீஸார் மற்றும் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக தேங்காய்பட்டினம் கடல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிதேலியூசை கண்டுபிடிக்க மீன்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT