Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

சேத்துப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் வசிப்பவர் மணி மகன் அஜித்குமார் (18) மற்றும் விநாயகமூர்த்தி மகன் நந்தகுமார்(22). இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

நெடுங்குணம் கிராமம் அருகே வந்தபோது, இரு சக்கர வாகனம் மீது அவ் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக, தி.மலை அரசு மருத்துவமனையில் நந்தகுமாரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அஜித்குமாரும் அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x