திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 10,842 தபால் வாக்குகள் பதிவு :

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 10,842 தபால் வாக்குகள் பதிவு :
Updated on
1 min read

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில்,திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,842தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளில் பணிபுரிந்த ஆசிரியர்கள், வருவாய் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில்கடந்த சில நாட்களாக பலரும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10,842 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால்வாக்குகளை செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in