Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் :

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன் (50). அதிமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், தொழில் பிரச்சினை காரணமாக, கடந்த 24-ம் தேதி மறைமலை நகரில் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதுகுறித்து மறைமலை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக சில நாட்களுக்கு முன் திருச்சி நீதிமன்றத்தில் ராஜேஷ், சரண்(20), தனுஷ்(26), குணசேகரன்(21), முருகன்(20), மகேஷ்(32), அஜித்(21) ஆகியோர் சரணடைந்தனர். இதேபோல, திருக்கோயிலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட இவர்களை மறைமலை நகர் போலீஸார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x