திண்டுக்கல் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடியை டிஐஜி திறந்து வைத்தார் :

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடியை டிஐஜி திறந்து வைத்தார் :
Updated on
1 min read

திண்டுக்கல் - மதுரை மாவட்ட எல்லையில் உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஊர் பொதுமக்கள் சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. சோதனைச் சாவடியை டி.ஐ.ஜி முத்துச்சாமி திறந்து வைத்தார். காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா குத்துவிளக்கு ஏற்றினார். சோதனைச்சாவடி அருகே இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயபாண்டி, ஒன்றியக் கவுன்சிலர் அறிவு, பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in