Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் : முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

நாமக்கல்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் 1,911 அலுவலக உதவியாளர்கள் உள்பட மொத்தம் 3,557 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றுக்கு இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அடிப்படை பணி விதி வகுப்பு 3-ன் கீழ் வரும் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூன் மாதம் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்க ளுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x