Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல் :

கரூர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்பேரில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பன், சின்னையன், தாந்தோணி குமார், பரமசிவம், முத்துசாமி, போட்டோபாலு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x