Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு :

விழுப்புரம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக் கின் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து அவர்கள் சார்பில் வழக்கறிஞர் கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கின் விசார ணையை வரும் ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x