Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

காஞ்சிபுரத்தில் உள்ள - கரோனா தொற்று தடுப்பு மையங்களில் ஆட்சியர் ஆய்வு :

காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் பகுதியில் அமைக்கப்படும் கரோனா தடுப்பு மையத்தை ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஐய்யங்கார் குளம்தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்புமையத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் 5,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் 300-ல் இருந்து 400 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிகள் பராமரிப்பு சிறப்பு மையத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் ஏற்பாடுகளை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் விரைவாக செய்ய, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

400 பேர் தங்கலாம்

மேலும் நோயாளிகளை தங்க வைக்க உள்ள இடத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐய்யங்கார் குளத்தில் அமைக்கப்படும் மையத்தில் 400 பேர் வரை தங்க முடியும். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) தர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x