Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

நெய்வேலி தொமுச புதிய நிர்வாகிகள் பதவியேற்பு :

நெய்வேலி தொமுச புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

நெய்வேலி என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.

இதில் தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலகச் செயலர் ஜெரால்டு, துணைத் தலைவர்கள், பகுதிச் செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 158 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து நெய்வேலியில் உள்ள தொமுசஅலுவலகத்தில் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

கடலூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன், சங்கத்தின் தேர்தல் ஆணையர் வேலுசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x