குளித்தலை அருகே நச்சலூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது :

குளித்தலை அருகே நச்சலூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் காளியம்மன் கோயில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக குளித்தலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பாரதி நேற்று முன்தினம் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினார். அப்போது, அங்கு லாட்டரி விற்பனை செய்துகொண்டிருந்த நங்கவரம் பூக்குழியைச் சேர்ந்த வாசுதேவன்(45), நச்சலூர் நடுத்தெருவைச் சேர்ந்த கண்ணன்(46), புருசம்பட்டியைச் சேர்ந்த மோகன்(29) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.7,700 மதிப்புள்ள 77 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.51,850 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in