

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.30) காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
தூத்துக்குடி மாநகரில் காலை 9 - 11 மணி: தூத்துக்குடி கனநீர் ஆலை மெயின், நம்மாழ்வார் தெரு சபா, ஆதிபராசக்தி நகர், வீரநாயக்கன்தட்டு, பிரையண்ட் நகர் 7-வது தெரு. காலை 11 - 1 மணி:மகாலெட்சுமி நகர், தனசேகர் நகர், இந்திரா நகர், ஆதிபராசக்தி கோயில், கே.வி.கே நகர் சர்ச். பகல் 2 - 4 மணி: சாமி நகர், மட்டக்கடை, அன்னை இந்திரா நகர், திரு.வி.க. நகர், டூவிபுரம்.
கோவில்பட்டியில் காலை 9 - 11 மணி: புதுகிராமம், 11 - 1 மணி:நந்தவனம், 2 - 4 மணி: போஸ் நகர்.
காயல்பட்டினத்தில் காலை 9 - 11 மணி: அம்பலமரைக்காயர் தெரு, 11 - 1 மணி: சுனாமி நகர், 2 - 4 மணி: வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு.
ஊராட்சி பகுதிகளில் காலை 9 - 11: புதுக்கோட்டை பால தண்டாயுத நகர், மேல மங்கலகுறிச்சி, கிளாக்குளம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், ஆறுமுகநேரி, ஆத்தூர் தலைப்பண்ணை, நாசரேத், உடன்குடி புதுமனை, தண்டுபத்து, சாத்தான்குளம், இடைசெவல், புதுப்பட்டி, கலைஞானபுரம், ஓணமாக்குளம், அச்சன்குளம்.
11 - 1 மணி: கோரம்பள்ளம், கீழ மங்கலகுறிச்சி, புதுக்குளம், முருகன்புரம், ஆறுமுகநேரி ஏஐடியுசி காலனி, தெற்கு ஆத்தூர், வெள்ளரிக்காயூரணி, உடன்குடி ரெங்கநாதபுரம், மானாடு, பூச்சிகாடு, வில்லிசேரி, புங்கவரநத்தம், துலுக்கன்குளம், இளவேலங்கால், அயன்வடமலாபுரம்.
2 - 4 மணி: குலையன்கரிசல், ஆலடியூர், புளியங்குளம், பாறைக்காடு, ஆறுமுகநேரி எஸ்ஆர்எஸ் கார்டன், குருகாட்டூர், ஆழ்வார்திருநகரி, வேதக்கோட்டவிளை -கொட்டங்காடு, எள்ளுவிளை, கடாட்சபுரம், குமரன்விளை, மந்திதோப்பு, லக்கம்மாள்தேவி, வைப்பார், வீரபாண்டியபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் தவறாது கலந்து கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.