உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் - பெருமாநல்லூர் - நம்பியூர் பிரதான சாலை நுழைவுவாயிலை மாற்றி அமைக்க எதிர்ப்பு :

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் -  பெருமாநல்லூர் - நம்பியூர் பிரதான சாலை நுழைவுவாயிலை மாற்றி அமைக்க எதிர்ப்பு :
Updated on
1 min read

திருப்பூர் ஒன்றியம் பெருமாநல்லூரில் இருந்து நம்பியூர் செல்லும் பிரதான சாலையில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் நுழைவுவாயில் உள்ளது. இந்த சாலையை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பெருமாநல்லூர் அரசு மருத்துவமனைக்குச் செல்வோர் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை முன்பு உள்புறமாக உள்ள நுழைவு வாயிலை நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் மாற்றியமைக்கும் கட்டுமானப் பணி, கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, தனி நபர் மற்றும், பொது நல வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உடனடியாக பணியை நிறுத்த வேண்டும் எனக் கூறினர். சம்பவ இடத்துக்கு பெருமாநல்லூர் போலீஸார் சென்று, எந்தவிதப் பணியும் செய்யக் கூடாது எனக் கூறியதால், பணி நிறுத்தப்பட்டது.

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. காவல், வருவாய், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், அதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in