ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு தி.கோட்டில் வங்கி, ஏடிஎம் மூடல் :

ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு தி.கோட்டில் வங்கி, ஏடிஎம் மூடல் :
Updated on
1 min read

திருச்செங்கோடு சங்ககிரி சாலை கருவேப்பம்பட்டியில் செயல்பட்டு வரும் வங்கியில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து வங்கி மூடப்பட்டுள்ளது. நேற்று வழக்கம் போல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

வங்கியின் அருகில் உள்ளஏடிஎம் மையமும் மூடப்பட்டுள் ளது. வங்கி பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால் வரும் 5 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவசர தேவை உள்ளவர்கள் அருகில் உள்ள வேறு கிளைகளில் வங்கி சேவையினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 4 நாட்களாக வங்கிக்கு வந்தவர்கள் யார், தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என கண்டறியும் பணி நடந்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in