வேலூர் கோட்டை அகழியில் ஆண் உடல் மீட்பு :

வேலூர் கோட்டை அகழியில் ஆண் உடல் மீட்பு :
Updated on
1 min read

வேலூர் கோட்டை அகழியில் அழுகிய நிலையில் ஆண் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர்.

வேலூர் கோட்டையை சுற்றிலும் அகழி உள்ளது. இந்நிலையில், வேலூர் புதிய மீன் மார்க்கெட் எதிரேயுள்ள அகழிப் பகுதியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் அகழியை பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று மிதப்பது தெரியவந்தது. உடனே, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் அகழியில் மிதந்த உடலை கைப்பற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணை யில், உயிரிழந்த நபர் வேலூர் சைதாப்பேட்டை வளையல்காரர் தெருவைச் சேர்ந்த பிச்சாண்டி (44) என்பதும், அவர் அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து அகழியில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in