Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு :

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகமும் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோவிட்-19 தொடர்பான தங்களது சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளைப் பெற 044-27237107, 044-27237207, 044-27237784,044-27237785 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கலாம். மேலும், இலவச அழைப்புகளுக்கு 1800-425-8978 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x