உடன்குடி அருகே தூண்டில் பாலத்தை - முழுமையாக அமைக்க கோரி போராட்டம் :

உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் படகுகளில் சென்று நிலக்கரி இறங்குதள பணிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் படகுகளில் சென்று நிலக்கரி இறங்குதள பணிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

தூண்டில் வளைவு பாலம் முழுமையாக அமைக்கக் கோரிகல்லாமொழி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதி மீனவர்கள் கடல் வழியாக படகுகளில் சென்று, அனல்மின் நிலையத்துக்காக நடைபெறும் நிலக்கரி இறங்குதள பணிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடன்குடி அனல்மின்நிலைய பணிக்காக கல்லாமொழி பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படுவதால் இப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கடல் சீற்றத்தால் படகுகள் சேதமடைந்து வருகின்றன. இதனால், இப்பகுதி மீனவர்கள் 7 கி.மீ., தொலைவில் உள்ளகுலசேகரன்பட்டினம் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்தி அங்கிருந்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களது படகுகளின் பாதுகாப்புக்காக கல்லாமொழி பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் முழுமையாக அமைக்கப்படாமல் அரைகுறையாக பணிகள் நடப்பதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் அரசு சார்பில் கல்லாமொழி பகுதி மக்களுக்கு குடிதண்ணீர், பேருந்துநிழற்கூடம் அமைத்து தருவதாகவும், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் ரூ. 5 லட்சம் மதிப்பில் காப்பீடுசெய்வதாகவும் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி தொடங்கிய போது உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

குலசேகரன்பட்டினம், கல்லாமொழி மீனவர்கள் 100 பேர் 30 படகுகளில் நேற்று காலை 6 மணியளவில்நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படும் இடத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த படகையும் சிறைபிடித்தனர்.

திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு காலை 8.30 மணியளவில் கரை திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in