இலுப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா :

இலுப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா :
Updated on
1 min read

அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சத்தியநாதபுரத்தில் அரசுப் பள்ளி, சாலையோரங்களில் மரம் அறக்கட்டளை, அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 130 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.

மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 130 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மரம் அறக்கட்டளையின் தலைவர் ராஜா, இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in